Saturday, March 31, 2012

பொன்னியின் செல்வன் - Part III


அத்தியாயம் 9 – ஓடத்தில் மூவர்


பொழுது புலர்ந்தது, கருநிற அழகியான இரவெனும் தேவி உலக நாயகனை விட்டுப் பிரிய மனமின்றிப் பிரிந்து செல்ல நேர்ந்தது. நாயகனைத் தழுவியிருந்த அவளுடைய கரங்கள் இலேசாகக் கழன்று விழுந்தன. வாழ்க்கையிலே கடைசி முத்தம் கொடுப்பவளைப் போல் கொடுத்து விட்டு இரவெனும் தேவி இன்னும் தயங்கி நின்றாள். “மாலையில் மறுபடியும் சந்திப்போம். நாலு ஜாம நேரந்தானே இந்தப் பிரிவு? சந்தோஷமாகப் போய்வா!” என்றது உலகம். இரவு தயங்கித் தயங்கி உலகத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு சென்றது.
உள்ளத்திலே அன்பில்லாத கள்ளக் காதலனைப் போல் இரவு பிரிந்து சென்றதும் உலகம் மகிழ்ச்சியினால் சிலிர்த்தது. “ஆகா; விடுதலை!” என்று ஆயிரமாயிரம் பறவை இனங்கள் பாடிக் களித்தன. மரங்களிலும், செடிகளிலும் மொட்டுக்கள் வெடித்து மலர்ந்தன. எங்கிருந்தோ வண்டுகள் மந்தை மந்தையாக வந்து இதழ் விரிந்த மலர்களைச் சூழ்ந்து கொண்டு இன்னிசை பாடிக் களித்தன. விதவிதமான வர்ணச் சிறகுகள் உள்ள தட்டாரப் பூச்சிகள் நாலா பக்கங்களிலும் ஆனந்தக் கூத்தாடின.
கீழ்வானத்தில் பொன்னிறம் கண்டது. வானச் சுடர்கள் ஒவ்வொன்றாக ஒளி மங்கி மறைந்தன. இதுவரையில் வானவீதியில் பவனி வந்து கொண்டிருந்த பிறைச் சந்திரன் “நிற்கட்டுமா? போகட்டுமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

Saturday, March 24, 2012

Varusham 16

Very recently I watched this movie - Varusham16. I am still wondering how I missed this movie for so long. The super beautiful Kushboo and typical Karthik naughty character best fits the movie. Yet another justification for building a temple for just an actress. The characters are mostly like real life ones (except for a dumb villain). This movie totally topped my expectations. Even more surprising to me was that the movie was made by Fazil, even though there were shades of Malayalam in it.

One word to describe the BGM and all the songs - brilliant. I have always thought ARR was my favorite over Ilayaraja and this calls for a marupariseelanai. A quick nap after watching the movie, made me dream of a close grand father - I don't remember seeing both of mine, ever. That shows the subtle yet powerful performance of Poornam Vishwanadhan.

Hats off to all who made such a wonderful movie possible.

#tamil_movie #வருஷம்16

Tuesday, March 6, 2012

பெண் பாலின் கதை


பெண்ணின் வாழ்கை, கடவுளின் கிறுக்கல்களில் ஒன்று. பிறப்பில் இருந்து இறப்பு வரை என்றுமே போராட்டம்.

ஒரு பெண் பாலின் கதை:

கள்ளிப்பாலில் தப்பிப்பிழைத்து,
காமதுப்பாலுக்கு பலியாகி,
தாய்ப்பால் கொடுத்தருளி,
இறப்பால் சுதந்திரம் அடைய நினைத்தாள்.

அனால் இறந்தால் பால் ஊற்ற மகனில்லை,
என்னும் பரிதவிப்பால் பிரிந்தது அவள் உயிர்.


Sunday, March 4, 2012

முதியத்திலும் தன்னம்பிக்கை

மனதை உருக்கிய கவிதை மற்றும் புகைப்படம்:

கட்டியவனோ காலமாகிவிட்டான் 
பெற்றவனோ கைகழுவிட்டான்
இருக்கின்ற காலங்கள் எதுவரையோ 
அதுவரையும் உழைத்தே உண்ணுவேன்.
முதுமை என் சுருக்கங்களுக்கு மட்டுமே, எனக்கில்லை
வாழும்வரை தன்னம்பிக்கையோடு !